தமிழ் பழகு-ர,ற வேறுபாடு அறிவோம் -தமிழ் பயிற்சித்தாள் -

 


                                                   ர, ற வேறுபாடு அறிக

மரம் - ஓரறிவு உயிர்

1.மரம் மனிதனுக்கு பலவகையில் பயன்படுகிறது.

மறம் - வீரம்

2.பண்டைய தமிழர்கள் மறச் செயல்புரிந்து புகழ் பெற்றனர்.

  இரத்தல் – யாசித்தல்.

3.பிறரிடம் யாசித்தல் இழிவானது.

இறத்தல் – உயிர் உடலை விட்டு பிரிதல்.

4.இறக்கும் வரையிலும் கல்வி கற்க வேண்டும்.

குரை – நாய் எழுப்பும் ஒலி ( சத்தம் )

5.திருடனைப் பார்த்து நாய் குரைத்தது.

குறை – தவறு /மிச்சம்

6.பிறரிடம் குறைகளை காணக் கூடாது.

பற -சிறகை விரித்து உயரே செல்லல்.

7.கழுகு உயரத்தில் பறக்கும்.

பர – பரவிய

8.தமிழர்கள் உலகெங்கும் பரந்த அளவில் வாழ்கின்றனர்.

எரி – நெருப்பு

9.நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

எறி – வீசுதல்

10.குப்பைகளைத் தெருவில் எறியக்கூடாது.

அரி - சிங்கம்

11.அரி காட்டின் அரசன்.

அறி – தெரிந்து கொள்

12.உலக நடப்புகளை அறிந்து கொள்.

இறை - கடவுள்

13.எழுத்து அறிவித்தவன் இறைவன்.

இரை -உணவு

14.பறவைகள் இரைத் தேடப் புறப்பட்டன.

அரை – பாதி

15.ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.

அறை - வீட்டின் ஒரு பகுதி

16.எங்கள் வீட்டின் சமையல் அறை அழகாக இருக்கும்.

அருகு – பக்கம்

17.எங்கள் வீட்டின் அருகில் பூங்கா உள்ளது.

அறுகு – ஒரு வகைப் புல்

18.அறுகம்புல் சாறு உடல் நலத்திற்கு ஏற்றது.

உரை – பேச்சு

19.மேடையில் தலைவர் உரை நிகழ்த்தினார்.

உறை – மூடி, தலையணை உறை

20.மருத்துவர் கை உறை அணிந்து பரிசோதித்தார்.

ஏரி – நீர்நிலை

21.ஏரியில் படகு சவாரி செய்யலாம்.

ஏறி – மேலே ஏறி

22.கந்தன் மாடிப் படிகளில் ஏறி மேலே சென்றான்.

உரு – வடிவம்

23.யானை நிலத்தில் வாழும் விலங்குகளில் பெரிய உருவம் கொண்டது.

உறு – மிகுதி /பெரிய

24.கொக்கு உறுமீன் வரும்வரை காத்திருக்கும்.

பரி – குதிரை

25.வீரன் பரியில் போர்க்களத்திற்குச் சென்றான்.

பறி - பிடுங்குதல்

26.மங்கை தோட்டத்தில் உள்ள பூக்களைப் பறித்தாள்.

கறி – காய்கறி

27.அம்மா கறி சமைத்தாள்.

கரி – அடுப்புக்கரி

28.அடுப்புக்கரி கருப்பு வண்ணம் உடையது.

திரை – அலை

29திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

திறை – வரி

30.ஒவ்வொரு குடிமகனும் அரசாங்கத்திற்கு திறை செலுத்த வேண்டும்.

கரை – மேட்டுப்பகுதி

31ஆற்றங்கரை ஓரங்களில் பனை மரங்களை நட வேண்டும்.

கறை – அழுக்கு

32.நாம் கறை இல்லா ஆடைகளை அணிய வேண்டும்.


Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை