கழுதை, நாய் -கருத்துணர்திறன்
அறிவுக் கதைகள்
நாயை வளர்த்தான் வண்ணான். துணிகளைத் திருடாமல் காவல் காத்துவந்தது அது. ஒரு சமயம் திருட வந்தவனைக் கண்டு குரைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். இப்படியிருக்க.
சில நாட்களுக்குப் பின்,
வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.
வண்ணான் எழுந்தான்; தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று, அடித்து நொறுக்கினான். இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரியவருகிறது.
சில வேலைகளைச் சிலர் தான் செய்யவேண்டும் ; அந்த வேலையை மற்றவர் செய்யக்கூடாது என்பது உண்மைதானே!
எதிர்ச் சொல் தருக
1. மகிழ்ச்சி × __________________
2. சத்தம் × _____________
3. உண்டு × _____________
4. சரி × _____________
5. சிலர் × _____________
6.உண்மை × _____________
7. பகல் × __________________
நிரப்புக:
1.வீட்டைக் காவல் காப்பது ----------------- (நரி 🦊 / நாய் 🐕).
2. வண்ணாண் எதற்காக மகிழ்ச்சி அடைந்தான்?
3. கழுதை அடி வாங்கியது ஏன்?
4. வண்ணாண் வளர்த்து வந்த விலங்குகள் பெயர் என்ன?
5.நாய் யாரைக் கண்டு குரைத்துதது?
Comments
Post a Comment