தோட்டக்காரனும் குரங்கும் - கருத்துணர்திறன்

தோட்டக்காரனும் குரங்கும்

           அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தோட்டக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான். அவன் தண்ணீர் ஊற்றும் போதெல்லாம் அங்கு சில குரங்குகள் வந்து விளையாடும்.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனும் குரங்கும் நண்பர்களாக இருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்து வந்தன.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விசயத்தைச் சொன்னான்.குரங்குகளுக்கு மகிழ்ச்சி. ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீர் ஊற்றுங்கள். சிறிய வேராக இருந்தால் கொஞ்சமா தண்ணீர், ஊற்றுங்கள்'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.''வேர் பெரியதாக இருக்கிறதா?, சிறியதாக இருக்கிறதா?என்று பார்ப்பதற்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

I.நிரப்புக

1. தோட்டக்காரன் செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது

 __________________ வந்து விளையாடும். (மாடுகள் / குரங்குகள் )


2. __________________ செய்யும் காரியங்களைப் பார்த்து குரங்குகளும் அப்படியே செய்தன. 

( சமையல்காரர்/ தோட்டக்காரன் )


3. தினமும் __________________ உள்ள செடி,கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வந்தான்.

( தோட்டத்தில் / காடுகளில் )


4.வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தைப் பார்த்த தோட்டக்காரன் 

   __________________ அடைந்தான். (மகிழ்ச்சி / அதிர்ச்சி).


II.சரியான எதிர்ச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக :


பல, சிறிய, பகைவர்கள்உள்ளூர்,  கவலை)


அ).பெரிய × __________________

ஆ).சில ×__________________

இ).வெளியூர் ×__________________

ஈ). மகிழ்ச்சி ×__________________

உ). நண்பர்கள் ×__________________



III. கீழ்க்காணும் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுக


1.வருடங்கள் - __________________

2.தோட்டம் - __________________

3.தண்ணீர் - __________________

4.கிராமம் - __________________

5.செடி - __________________

6.வேர் - __________________

7.நண்பர்கள் - __________________

8.அதிர்ச்சி - __________________

9.மகிழ்ச்சி - __________________

10.யோசனை - __________________


IV. வெளியூர் சென்று திரும்பிய தோட்டக்காரன் ஏன் அதிர்ச்சி அடைந்தான்?


  

Comments

Popular posts from this blog

Tamil comprehension - தமிழ் பயிற்சித் தாள்-கருத்துணர்திறன் - நல்ல பழக்கங்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை

புதிர்கள்