Posts

உண்மையான நண்பன்

  ஒரு செல்வந்தர் வீட்டில் தெண்டன் என்பவன் காவலாளியாக வேலை பார்த்து வந்தான். தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பும் போது, மது அருந்தி வயிறு நிறையச் சாப்பிட்டு வருவான். அவன் மனைவி, “தினமும் இப்படிக் குடித்துவிட்டு, தின்னுவிட்டு வருகிறாயே? உன்னுடைய சம்பளம் இதற்கே போய் விட்டால், குடும்பத்தை எப்படி நடத்துவது?” என்று கடிந்து கொண்டான். அதற்கு தெண்டன், “நான் வேலை செய்யும் வீட்டில், சிங்கன், வீரன் என இருவர் தோட்ட வேலை பார்க்கின்றனர். அவர்கள் இருவரும் என்னிடம் மிகுந்த பிரியம் உடையவர்கள். சிங்கன் எனக்கு மதுவும், உணவும் அளிப்பான். வீரனோ தன் உயிரையே கொடுக்கக் கூடியவன்.” என்று கூறினான். சில நாட்களுக்குப் பிறகு, தெண்டனும் அவன் மனைவியும் சிங்கன் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை அவன் அன்போடு வரவேற்று, உபசரித்து, விருந்து அளித்து, அனுப்பி வைத்தான். அதன் பிறகு, வீரன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீரனும் அவன் மனைவியும் சூதாட்டத்தில் கவனமாக இருந்தனர். என்றாலும், சிறிது நேரம் அன்போடு பேசி, உணவு அளிக்காமல், அனுப்பி வைத்தனர். தெண்டன் மனைவிக்கு அவர்கள் உணவு அளிக்காதது வருத்தம் தந்தது. “வீரன் உயிரையே கொடுக்க...

புதிர்கள்

  1. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்?  2. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்?  3. பச்சை நிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்? 4. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்?  5. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?

பழமொழிகள்

 1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. 3.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. 4.ஆழம் அறியாமல் காலை விடாதே. 5.இக்கரைக்கு அக்கரை பச்சை. 6.மின்னுவது எல்லாம் பொன் அல்ல. 7.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 8.பார்த்தால் பூனை , பாய்ந்தால் புலி. 9.வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும். 10.யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.

சொற் றொடர்

  1. தாமரைப் பூ  குளத்தில்  பூக்கும். 2. ஆடையில் படிவது கறை. 3.என் பள்ளியில் பல அறைகள் இருந்தன. 4.சூரியன் ஒளி தரும். 5. சிங்கத்தைப் பிடிக்க வேடன் வலை விரித்தான். 6.புலி மானை துரத்தியது. 7.மேகம் மழை தரும். 8.மலையில் ஆடுகள் மேய்ந்தன. 9.மல்லிகை மலர் மணம் வீசியது. 10.வயலில் கரும்பு விளைந்தது.

கருத்துணர்திறன் சிறுத்தை

 ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.  அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின. சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது. உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது. முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும் வினாக்கள்  1. சிறுத்தை ஏன் காட்டில் அலைந்தது? 2...

நேர்மை

  மன்னன் ஒருவன் தன் நாட்டு மக்கள் நேர்மையாக வாழ்கின்றனரா என்று அறிய விரும்பினான். அதனால் அரசுப் பணியாளரிடம் இரண்டு ரொட்டித் துண்டுகளைக் கொடுத்து இரண்டு பேரிடம் கொடுக்கச் சொன்னார். ஒரு ரொட்டியில் வைரக்கற்களை உள்ளே வைத்தும் ஒரு ரொட்டித் துண்டில் ஒன்றும் வைக்காமலும் கொடுத்து விட்டார். அரசுப் பணியாளர் அரண்மனையை விட்டு வெளியே சென்று வைரக்கற்கள் உள்ள ரொட்டியைச் சாது ஒருவரிடமும் சாதாரண ரொட்டியைப் பிச்சைக்காரரிடமும் கொடுத்தான். மன்னர் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சாது ரொட்டியை வாங்கிப் பார்த்தார். பெரியதாகவும் கரடுமுரடாகவும் இருந்ததால் அது வேகவில்லை என எண்ணி அதனைப் பிச்சைக்காரரிடம் கொடுத்துவிட்டுப் பிச்சைக்காரரிடம் இருந்த ரொட்டியை அவர் வாங்கிக் கொண்டும் சென்று விட்டார். சாது வீட்டுக்குச் சென்றார். தாடியை அகற்றி விட்டு ரொட்டியைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் தாடியைப் பொருத்திக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். பிச்சைக்காரர் வீட்டிற்குச் சென்றார். தன் மனைவியுடன் ரொட்டியைப் பகிர்ந்து உண்பதற்காக எடுத்தார். அதற்குள் விலையுயர்ந்த வைரக் கற்களைப் பார்த்ததும் அதனை அரசுப் பணியாளரிடம் கொடுக்க  மு...

பட்டம் கருத்துணர்திறன்

 உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. குப்பன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். தான் செய்யும் வேலையில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று எண்ணுவான். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்பதே அவன் ஆசை. ஒருநாள், அவன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய தந்தை அங்கு வந்தார். “இந்தப் பட்டத்தைப் பார்க்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது” எனக் கேட்டார். அதற்குக் குப்பன், “இந்த நூல் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுத்துக் கொண்டிருக்கிறது” என்றான். உடனே அவன் தந்தை, பட்டத்தின் நூலை அறுத்து விட்டார். பட்டம் தடுமாறிக் கீழே விழுந்தது. இப்பொழுது பார், வரையறைக்குட்பட்டு நூலுடன் இருக்கும்போது இந்தப் பட்டம் எவ்வளவு அழகாகப் பறந்து கொண்டிருந்தது? ஆனால், அந்த நூல்தான் பட்டத்தின் சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று நீ நினைத்தாய். இப்போது என்ன ஆயிற்று? நூல் அறுந்ததும் நிலை தடுமாறி, அந்தப் பட்டம் கீழே விழுந்துவிட்டதே! இதுபோலத்தான் நம் வாழ்க்கையும் நூலறுந்த பட்டமாய் இருந்தால் நாமும் வாழ்வில் தடுமாறக்கூடும்” என்று கூறினார்