Posts

பெரிய ஆலமரம் முன்னுணர்வுக் கருத்தறிதல்

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கோட்டில் எழுதுக. ஓர் ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள், பெரியவர் ஒருவர் அந்த வழியாக வந்தார். அவர் ஆலமரத்தைப் பார்த்தார். (1) _______________ உடனே, "இந்தப் பெரிய மரத்தில் இவ்வளவு சிறிய பழங்களா? பார்க்க வேடிக்கையாக இருக்கிறதே!" என்றார். சிறிது நேரம் நிறையப் பழங்கள் இருப்பதைக் கவனித்தார். அந்த மரத்தடியில் (2)____________________காற்றுப் பலமாக (3)___________________ தூங்கினார். அப்போது ஒரு பழம் அவர் நெற்றியில்(4)_____________________ திடுக்கிட்டு எழுந்தவர், "நல்ல வேளை! பழம்(5) ____________________ இருந்தது!" என்று எண்ணினார். பிறகு, அவர் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினார். படுத்து விழுந்தது அதன் தொட்டது அதில் சிறியதாக வீசியது சரி (v) குறியீடு இடு. விடுபட்ட சொற்களைப் பத்தியில் நிரப்பி அதை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடியும். 29

அகிலன் - நாய்க்குட்டி

 அகிலன் ஒருநாள் பள்ளியில் இருந்து தன் அப்பாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அப்போது சாலையோரத்தில் ஒரு நாய்க்குட்டியொன்று நடக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருந்தது. பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்து வேகமாக வந்ததில் நாய்க்குட்டி பயந்து போய் ஓடியதில் அதனுடைய காலில் அடிபட்டுவிட்டது. அகிலன் தன் அப்பாவிடம் அந்த நாய்க்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினான். அப்பாவும் சரியென்று கூறிவிட்டு அந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அதற்கு ஊசி போட்டு, கொஞ்சம் மாத்திரைகளைக் கொடுத்தனர். வீட்டிற்குத் தூக்கி வந்து அதற்குப் பால் சாதம் கொடுத்தான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தான். இரண்டு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த நாய்க்குட்டி பழையபடி நன்றாக நடந்தது. அதற்குப் பிறகுதான் அகிலன் மகிழ்ந்தான்.       பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக: 1. அகிலன் சாலையோரத்தில் எதைக் கண்டான் ? ________________________________________________...

கடை ஏழு வள்ளல்கள்

கடை ஏழு வள்ளல்கள் சங்க காலத்தில் மன்னர் பலர் வள்ளல்களாக இருந்திருக்கின்றனர். அவர்களுள் மிக சிறப்பு வாயிந்த வள்ளல்கள் எழுவர். இவர்களை கடை ஏழு வள்ளல்கள் என்றும் அழைப்பர். 1.பேகன் இவன் பழனி மலை பகுதியில் வாழும் ஆவியர் குடியைச் சேர்ந்த மக்களின் தலைவன் மழை பொழியும் மலை சாரல் பாதையில் சென்றுக் கொண்டு இருந்தபோது கருமேகங்களைக் கண்டு ஆடி கொண்டிருந்த மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி தன் போர்வையை அதன் மீது போர்த்தி விட்டவன் இதனால் இவனை மயிலுக்குப் போர்வை தந்த வள்ளல் பேகன் என அழைக்கப் பட்டன். 2.பாரி வள்ளல் இவன் பறம்பு மலைப் பகுதியை ஆண்ட மன்னன். இவன் பறம்பு மலைப் பகுதியைச் சேர்ந்த நாகமலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது படர்வதுக்கு பற்றுக் கோடு இல்லாமல் ஆடி கொண்டிருந்த முல்லைக் கொடி படர்வதற்காகத் தன் தேரையே கொடியருகில் நிறுத்தி விட்டுச் சென்றவன் ஆகவே இவனை முல்லைக்குத் தேர் ஈந்த பாரி என பெயர் பெற்றான் அவ்வையார் கூட இந்த வள்ளலை பாராட்டி சங்க பாடலொன்று பாடியுள்ளார். 3. வள்ளல் காரி இம்மன்னன் தன் கையில் உள்ள வாள் வீச்சில் பகைவர்களை வெட்டிவீழ்த்துவதைப் பொழுதுப் போக்காக கொண்டிருந்தான். அதனால் இவன் வாள...

சிங்கமும் கொசுவும்

 சிங்கமும் கொசுவும் ஒரு காட்டில் சிங்கம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய கொசு அதன் காதருகே வந்து பாடியது. சிங்கம் கோபத்துடன் கொசுவை விரட்டியது. கொசு கடித்தால் சிங்கம் தன் கைகளால் அடித்துக்கொள்ள, கொசு தப்பித்து, சிங்கத்தின் முகத்திலேயே கடித்தது. கோபத்தில் சிங்கம் தன்னையே கீறி காயப்படுத்திக்கொண்டது. இறுதியாக, சிறிய கொசுவிடம் சிங்கம் தோற்றுப்போனது.  நீதி: உருவத்தைக் கண்டு யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. சிறியவனும் பெரிய ஆபத்தை விளைவிக்க முடியும்.  எளிய சொற்கள்  1.காடு 2.கொசு 3.சிங்கம் 4.நரி 5.யானை 6.முயல் 7.பட்டாம்பூச்சி 8.முதலை 9.கரடி 10.மீன்கள் 11.காற்று 12.தவளை 13.ஆறு 14.மரங்கள் 15.பூக்கள் 16.வருத்தம் 17.உணவு 18.பேராசை 19.குளிர்ச்சி 20.ஆபத்து

உண்மையான நண்பன்

  ஒரு செல்வந்தர் வீட்டில் தெண்டன் என்பவன் காவலாளியாக வேலை பார்த்து வந்தான். தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பும் போது, மது அருந்தி வயிறு நிறையச் சாப்பிட்டு வருவான். அவன் மனைவி, “தினமும் இப்படிக் குடித்துவிட்டு, தின்னுவிட்டு வருகிறாயே? உன்னுடைய சம்பளம் இதற்கே போய் விட்டால், குடும்பத்தை எப்படி நடத்துவது?” என்று கடிந்து கொண்டான். அதற்கு தெண்டன், “நான் வேலை செய்யும் வீட்டில், சிங்கன், வீரன் என இருவர் தோட்ட வேலை பார்க்கின்றனர். அவர்கள் இருவரும் என்னிடம் மிகுந்த பிரியம் உடையவர்கள். சிங்கன் எனக்கு மதுவும், உணவும் அளிப்பான். வீரனோ தன் உயிரையே கொடுக்கக் கூடியவன்.” என்று கூறினான். சில நாட்களுக்குப் பிறகு, தெண்டனும் அவன் மனைவியும் சிங்கன் வீட்டுக்குச் சென்றனர். அவர்களை அவன் அன்போடு வரவேற்று, உபசரித்து, விருந்து அளித்து, அனுப்பி வைத்தான். அதன் பிறகு, வீரன் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீரனும் அவன் மனைவியும் சூதாட்டத்தில் கவனமாக இருந்தனர். என்றாலும், சிறிது நேரம் அன்போடு பேசி, உணவு அளிக்காமல், அனுப்பி வைத்தனர். தெண்டன் மனைவிக்கு அவர்கள் உணவு அளிக்காதது வருத்தம் தந்தது. “வீரன் உயிரையே கொடுக்க...

புதிர்கள்

  1. இரவில் உணவு தேடிடுவேன், தலைகீழாகத் தொங்கிடுவேன். நான் யார்?  2. கரைந்து கரைந்து அழைத்திடுவேன், கூட்டமாக வாழ்ந்திடுவேன். நான் யார்?  3. பச்சை நிறத்தில் இருந்திடுவேன், பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன். நான் யார்? 4. மழை வருமுன்னே உணர்த்திடுவேன், தோகை விரித்து ஆடிடுவேன். நான் யார்?  5. வெண்மை நிறத்தில் நானிருப்பேன், ஒற்றைக் காலில் நின்றிடுவேன், நான் யார்?

பழமொழிகள்

 1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. 3.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. 4.ஆழம் அறியாமல் காலை விடாதே. 5.இக்கரைக்கு அக்கரை பச்சை. 6.மின்னுவது எல்லாம் பொன் அல்ல. 7.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 8.பார்த்தால் பூனை , பாய்ந்தால் புலி. 9.வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும். 10.யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.