Posts

Showing posts from June, 2021

பட்டம் பறக்குது

  பாடம் 1- பட்டம் பறக்குது. எளிய சொற்கள் 1.பட்டம் 2.வண்ணம் 3.காற்று 4.வானம் 5.வால் 6.வட்டம் 7.போட்டி 8.பறவை II.எதிர்ச் சொல் 1.மேல் ×கீழ்

பேசாதவை பேசினால்

  பேசாதவை பேசினால் எளிய சொற்கள் 1.பூங்கா 2.வணக்கம் 3.பூக்கள் 4.உணவு 5.ஈக்கள் 6.குப்பைத்தொட்டி 7.புல்தரை 8.தண்ணீர் 9.குடிநீர் 10.எல்லாம் 11.வியப்பு 12.மகிழ்ச்சி எதிர்ச்சொற்கள் 1.மேலே × கீழே 2.கனவு × நினைவு 3.நல்ல × கெட்ட 4.இங்கு × அங்கு 5.வா × போ 6.ஏறி × இறங்கி 7.மகிழ்ச்சி × கவலை

பேசாதவை பேசினால் - திறனறிதல்

பேசாதவை பேசினால் திறனறிதல் எளிய சொற்கள் 1.பூ ------ கா ( ன்/ங் ) 2.ஈ ---- கள் ( க்/ட் ) 3.பு----- தரை (ள் /ல் ) 4.உ----- வு (ண/ந) 5.தண்------ ர் (னீ/ணீ ) எதிர்ச்சொற்கள் 1.மகிழ்ச்சி × 2.ஏறி × 3.நல்ல × 4.இங்கு ×  5.வா ×

புதிர் - விடையை கண்டுபிடி

Image
  புத்திசாலி இளைஞன்   அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது. தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது. அரசனும்,” நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்” என்று எந்த நேரமும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற , அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு, மருந்தினைத் தயார் செய்தார். மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள். அப்போது ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். “அரசனை நான் சாப்...

தமிழ் பயிற்சித்தாள்-கருத்துணர்திறன் std 3-5

                                                           தமிழ் பயிற்சித்தாள்-கருத்துணர்திறன்                         அன்பான சிங்கம்  அது ஓர் அடர்ந்த காடு. அந்த காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அது மிகவும் அன்பானது. குகையில் இருந்து வெளியே வந்தது. அப்போது மரத்தின் கீழே பசியோடு அமர்ந்திருந்த அணிலைக் கண்டது.      சிங்கம் அணிலின் அருகே சென்றது. அணில் பயந்து நடுங்கியது. சிங்கமோ அணிலுக்கு பழம் ஒன்றைக் கொடுத்தது. அணில் அன்புடன் நன்றி கூறியது. 1. உனக்குத் தெரிந்த காட்டு விலங்குகளின் பெயர்கள் 5 எழுது. 2. காட்டின் அரசன் யார்? 3. எதிர்ச் சொல் • கீழே           × __________. • உள்ளே     × __________. • அருகில்    × __________.

தமிழ் பழகு-ர,ற வேறுபாடு அறிவோம் -தமிழ் பயிற்சித்தாள் -

                                                     ர, ற வேறுபாடு அறிக மரம் - ஓரறிவு உயிர் 1.மரம் மனிதனுக்கு பலவகையில் பயன்படுகிறது. மறம் - வீரம் 2.பண்டைய தமிழர்கள் மறச் செயல்புரிந்து புகழ் பெற்றனர்.   இரத்தல் – யாசித்தல். 3.பிறரிடம் யாசித்தல் இழிவானது. இறத்தல் – உயிர் உடலை விட்டு பிரிதல். 4.இறக்கும் வரையிலும் கல்வி கற்க வேண்டும். குரை – நாய் எழுப்பும் ஒலி ( சத்தம் ) 5.திருடனைப் பார்த்து நாய் குரைத்தது. குறை – தவறு /மிச்சம் 6.பிறரிடம் குறைகளை காணக் கூடாது. பற -சிறகை விரித்து உயரே செல்லல். 7.கழுகு உயரத்தில் பறக்கும். பர – பரவிய 8.தமிழர்கள் உலகெங்கும் பரந்த அளவில் வாழ்கின்றனர். எரி – நெருப்பு 9.நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எறி – வீசுதல் 10.குப்பைகளைத் தெருவில் எறியக்கூடாது. அரி - சிங்கம் 11.அரி காட்டின் அரசன். அறி – தெரிந்து கொள் 12.உலக நடப்புகளை அறிந்து கொள். இறை - கடவுள் 13.எழுத்து அறிவித்தவன் இறைவன். இரை -உணவு ...

தமிழ் பயிற்சித்தாள் -கருத்துணர்திறன் தங்க முட்டை

Image
  தங்க முட்டை! ஒரு விவசாயி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்; அவரிடம் தங்க முட்டையிடும் ஒரு வாத்து இருந்தது.                தினமும் அந்த வாத்து ஒரு தங்க முட்டை அளிக்கும்; அதை விற்று அந்த விவசாயி தனது தினசரி வாழ்க்கையை நடத்தி வந்தார்.   திடீரென ஒரு நாள் வாத்தின் வயிற்றில் இருக்கும் அனைத்து முட்டைகளையும், ஒரே நாளில் எடுத்து விற்றுவிட்டால் அதிக பணம் கிடைக்கும் என்று சிந்தித்த விவசாயி, அதனை தனது மனைவியிடம் கூறினான்.   அவன் மனைவியும் கொஞ்சம் கூட யோசித்து பார்க்காமல், சரி என்று கூற, அச்சமயமே அவர்கள் வாத்தினை அறுத்து அதிலிருந்து தங்க முட்டைகளை எடுக்க முயன்றனர்; ஆனால் தங்கமுட்டைகளுக்குப் பதிலாக வாத்தின் உடலில் இருந்து இரத்தமே வெளிப்பட்டது. தம்பதியர் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் தங்களுக்கு இத்தனை நாள் சோறு போட்டுக்கொண்டிருந்த பெரும் மூலதனத்தையும் இழந்து தவித்தனர்.     நீதி : பேராசை பெரும் நஷ்டம் நிரப்புக 1. விவசா ____ ( சி/யி) 2. குடு ___ பம் ...