Posts

Showing posts from January, 2022

சொல்லிக் கொண்டே எழுதிப் பழகு

வாக்கியம் 1. காட்டில் விலங்குகள் வாழ்கின்றன. 2. மரத்தில் பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன. 3. சிங்கம் குகையில் வசிக்கும். 4. பாலைவனத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். 5. பசு புல் மேய்கிறது. 6. தென்னைமரம் உயரமாக வளரும். 7. அனைவரும் சமம் ஆனவர்கள். 8. காட்டின் அரசன் சிங்கம் 🦁. 9. வேட்டைக்காரர்கள் விலங்குகளை வேட்டை ஆடினர். 10. மரம் 🌲 வளர்ப்போம். மழை ⛈️ பெறுவோம்.

இயற்கை வேளாண்மை -கட்டுரை

முன்னுரை : வளர்ந்துவரும் நவீனயுகத்தில் நாம் அனைவரும் இயற்கையை மறந்து செயற்கையைப் போற்றியதால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம். இந்நிலையை மாற்றுவதே இயற்கை வேளாண்மை. அதனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மாசடைந்த நிலங்கள் : நல்ல விளைச்சல், பார்ப்பதற்குப் பெரிய பெரிய காய்கறிகள், கனிகள், குறுகிய காலத்தில் நிறைய இலாபம் இதனை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தினோம். அதனால் வளம் இழந்தது மண் மட்டுமா? நாமும்தான். நீர்வளம், நிலவளம் குறைந்தது போல நமக்கும் புதிய புதிய நோய்கள் வந்து வலுவிழந்துவிட்டோம். இயற்கை உரங்கள் : மண்புழுக்களை உற்பத்தி செய்து உரமாகப் பயன்படுத்துதல், கால்நடைகளின் சாணங்களை எருவாக்குதல், பண்ணையில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளின் கழிவுகளை உரமாக்குதல், ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பிண்ணாக்குகளை உரமாக்குதல். இவையனைத்தும் இயற்கை உரங்கள். இவற்றைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவோம். நன்மைகள் : இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் விளைநிலங்களில் நன்மை செய்யும் பூச்சிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கைபெருகுகிறது...

கட்டுரை -சென்னை

கட்டுரை -சென்னை எனது மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் : என்னுடைய மாவட்டம் சென்னை . இது நம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. இங்குள்ள மெரினா கடற்கரை, உலகிலேயே மிக நீண்ட கடற்கரைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. சென்னை வாசிகள் ஆசையோடு பொழுதுபோக்கி மகிழும் அருமையான திறந்த வெளி இடமாகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் கட்டப்பட்டது புனித ஜார்ஜ் கோட்டை. இதன் வெளிப்புறத்தில் அகழி , அதனை சுற்றி மதில் சுவர்கள் உள்ளன. கோட்டையின் முன்பு மிகவும் உயரமான கொடிக்கம்பமும் உள்ளது. அண்ணா அருங்காட்சியகம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் ஆகியவை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரில் தனது நாட்டிற்காக இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக போர் நினைவுச் சின்னம் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் இராணுவ தினத்தின் போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இந்தியாவிலுள்ள பழமையான அருங்காட்சியகங்களில் இரண்டாவது இடத்தை வகிப்பது. இது 1851ல் நிறுவப்பட்டது. இது தேசிய மர...

பாடம் 17 சிறிய உருவம் பெரிய உலகம்

பாடம் 17 சிறிய உருவம் பெரிய உலகம்   எளிய சொற்கள் 1. எறும்புப்புற்று 2. அரிசி 3. சிறிய 4. வியப்பு 5. நுழைந்து 6. முயற்சி 7. சேமிப்பு 8. அறைகள் 9. மரத்தடி 10. அமர்ந்து 11. தேன்கூடு 12. சிறகுகள் 13. மரக்கிளை 14. நீரோடை 15. மகிழ்ச்சி விடை எழுதுக 1. கண்மணி எங்கெங்கே சென்றாள்? விடை :  கண்மணி, *எறும்புப்புற்று * தேன்கூடு * நீரோடை  ஆகிய இடங்களுக்கு சென்றாள்.   

பா 17நட்பே உயர்வு

  பாடம் 17 நட்பே உயர்வு எளிய சொற்கள் 1.   அடர்ந்த காடு 2.   நெடுநாள் 3.   அன்பு 4.   பாசம் 5.   எண்ணம் 6.   வேட்டை 7.   நண்பன் 8.   விலங்குகள் 9.   ஆபத்து 10.       புதிர் 11.       தந்திரம் 12.       சூழ்ச்சி 13.       தூரம் 14.       வெகுநேரம் 15.       குகை 16.       கடிகாரம் 17.       மகிழ்ச்சி 18.       இரை 19.       கடைசி 20.       ஆரம்பம் 21.       முயல் 22.       நரி 23.       சிங்கம் 24.       மான் 25.       நம்பிக்கை 26.       மழை 27.   ...
  பாடம் 17 நட்பே உயர்வு எளிய சொற்கள் 1. அடர்ந்த காடு 2. நெடுநாள் 3. அன்பு 4. பாசம் 5. எண்ணம் 6. வேட்டை 7. நண்பன் 8. விலங்குகள் 9. ஆபத்து 10. புதிர் 11. தந்திரம் 12. சூழ்ச்சி 13. தூரம் 14. வெகுநேரம் 15. குகை 16. கடிகாரம் 17. மகிழ்ச்சி 18. இரை 19. கடைசி 20. ஆரம்பம் 21. முயல் 22. நரி 23. சிங்கம் 24. மான் 25. நம்பிக்கை 26. மழை 27. மெழுகுவர்த்தி 28. அழைத்து 29. தொடக்கம் 30. வேறுவழி