Posts

Showing posts from July, 2021

ர,ற வேறுபாடு அறிக Tamil work sheet

Image
  ர, ற வேறுபாடு அறிக மரம் - ஓரறிவு உயிர் 1.மரம் மனிதனுக்கு பலவகையில் பயன்படுகிறது. மறம் - வீரம் 2.பண்டைய தமிழர்கள் மறச் செயல்புரிந்து புகழ் பெற்றனர்.   இரத்தல் – யாசித்தல். 3.பிறரிடம் யாசித்தல் இழிவானது. இறத்தல் – உயிர் உடலை விட்டு பிரிதல். 4.இறக்கும் வரையிலும் கல்வி கற்க வேண்டும். குரை – நாய் எழுப்பும் ஒலி ( சத்தம் ) 5.திருடனைப் பார்த்து நாய் குரைத்தது. குறை – தவறு /மிச்சம் 6.பிறரிடம் குறைகளை காணக் கூடாது. பற -சிறகை விரித்து உயரே செல்லல். 7.கழுகு உயரத்தில் பறக்கும். பர – பரவிய 8.தமிழர்கள் உலகெங்கும் பரந்த அளவில் வாழ்கின்றனர். எரி – நெருப்பு 9.நாளுக்கு நாள் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எறி – வீசுதல் 10.குப்பைகளைத் தெருவில் எறியக்கூடாது. அரி - சிங்கம் 11.அரி காட்டின் அரசன். அறி – தெரிந்து கொள் 12.உலக நடப்புகளை அறிந்து கொள். இறை - கடவுள் 13.எழுத்து அறிவித்தவன் இறைவன். இரை -உணவு 14.பறவைகள் இரைத் தேடப் புறப்பட்டன. அரை – பாதி 15.ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன். அறை - வீட்டின் ஒரு பகுதி 16.எங்கள் வீட்டின் சமையல் அறை அழகாக இருக்கும். அருகு – பக்கம் 17.எங்கள் வீட்டின் அர...

Tamil work sheet comprehension - ஓரறிவு முதல் ஆறறிவு வரை

Image
  ஓரறிவு முதல் ஆறறிவு வரை அறிவு என்பது ஆறு வகையாக பிரிக்கப்படுகிறது ஓரறிவு ஈரறிவு மூவறிவு என்று கூறுகின்றோம். எந்த உயிரினத்திற்கும் எத்தனை அறிவு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். ஓரறிவு                      ஓரறிவு என்பது உடலை மட்டும் கொண்டிருக்கும் உயிர் ஆகும். அதனால் அதற்கு தொடுதல் உணர்ச்சி மட்டுமே இருக்கும். தன் உடலால் மட்டும் உணர்வது முதலாம் அறிவு ஆகும். ஓர் அறிவை மட்டும் பெற்றிருப்பது தாவரங்கள். எடுத்துக்காட்டு மரம் செடி கொடிகள் போன்றவைகளாகும். ஈரறிவு         இரண்டாவது அறிவு என்பது உடல் மற்றும் வாய் ஆகிய இரண்டை மட்டும் பெற்றிருக்கின்ற உயிரினமாகும். உடலால் தொடுதல் உணர்வையும் நாக்கினால் சுவைத்தல் உணர்வையும் கொண்டிருக்கும். ஒரு சில கடல் வாழ் உயிரினங்கள் ஈரறிவைப் பெற்றிருக்கும்.எடுத்துக்காட்டு நத்தை சங்கு  மூவறிவு    மூவறிவு என்பது உடல், நாக்கு(வாய்) மற்றும் மூக்கு ஆகிய மூன்றை மட்டும் கொண்டிருக்கும் உயிரினமாகும். அவை என்னவென்றால் ஊர்வன வகையை சார்ந்ததாகும். எடுத்துக்காட்டு: கரையான், எறும்...

Tamilworksheet - ஒருமை வாக்கியங்களை பன்மை வாக்கியங்களாக மாற்று

Image
  ஒருமை வாக்கியங்களை பன்மை வாக்கியங்களாக மாற்று 1. பூ பூத்தது. 2. பட்டம் பறந்தது. 3. மாடு மேய்ந்தது. 4. மரம் வளர்ந்தது. 5. பேருந்து நின்றது. 6. மீன் நீந்தியது. 7. நாய் குரைத்தது. 8. அவர் வந்தார். 9. மாணவன் படித்தான். 10. மான் ஓடியது. 11. மாணவி ஆடினாள். 12. காகம் கரைந்தது. 13. மயில் ஆடியது. 14. பூனை பதுங்கியது. 15. விண்மீன் மின்னியது. 16. நாள் சென்றது. 17. மாடு மிரண்டது. 18. குயில் கூவியது. 19. பழம் பழுத்தது. 20. பன்றி ஓடியது. 21. பெண் சமைத்தாள். 22. குழந்தை சிரித்தது. 23. மாலை கட்டினான். 24. பயணம் செய்தார். 25. படம் வரைந்தான். 26. கோலம் போட்டாள். 27. மிதிவண்டி ஓட்டினான். 28. மின்விசிறி சுற்றியது. 29. செடி அசைந்தது. 30. தலைவர் பேசினார்.

Tamil wroksheet - முறைமாறிய சொற்களை முறைப்படுத்தி பொருள்தரும் வாக்கியமாக மாற்று.

Image
முறைமாறிய சொற்களை முறைப்படுத்தி பொருள்தரும் வாக்கியமாக மாற்று. 1. ஆத்திச்சூடி மாலா கற்றாள். 2. திசை கிழக்கு உதிக்கும் சூரியன். 3. சென்றான் பள்ளிக்குச் ராம். 4. பாடல்கள் இருக்கும் இனிமையாக. 5. எழுதினார் கரும்பலகையில் ஆசிரியர் 6. பானை குயவன் விற்றார். 7. தாவியது மரத்தில் குரங்கு. 8. எழுதினாள் திருக்குறள் கீதா. 9. இருக்கும் ஆந்தையின் பெரிதாக கண்கள். 10. கதைக்கேட்டு பாட்டியிடம் உறங்கினாள் சீதா. 11. கொண்டிருக்கும் சுவையைக் தேன் இனிப்பு. 12. ஏழு நாட்கள் ஒரு வாரம் என்பது கொண்டது. 13. விழா ஆண்டு பள்ளியில் நடைபெற்றது. 14. நன்றாக கயல்விழி எழுதினாள் கவிதை. 15. குணம் செம்பருத்தி நிறைந்தது மருத்துவ. 16. உள்ளது கடற்கரை நீளமான சென்னையில். 17. புதிய தந்தை பரிசளித்தார் பொம்மையைப் 18. பூத்துக் செடியில் பூக்கள் குலுங்கின. 19. மணலில் கடற்கரை விளையாடினோம். 20. செய்திகளையும் அனைத்து அறிய தொலைக்காட்சி உதவும். 21. உயரமாக வளரும் தென்னை மரம். 22. செய்தித்தாள்கள் தினமும் வாசிப்பேன் நான். 23. வாங்கி புத்தகம் படித்தான் சிவா. 24. சுற்றுலாச் விடுமுறையில் சென்றான் கபிலன். 25. வாழ்கிறோம் நாங்கள் சேர்ந்து ஒற்றுமையாகச்....

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை

Image
                                                               சாணக்கியரின் நேர்மை  இந்திய வரலாற்றில் சரித்திர புகழ் பெற்ற அரசர்களுள் சந்திரகுப்தர் ஒருவர். சந்திரகுப்தரின் குருவாகவும், அரசவை தலைமை அமைச்சராகவும் சாணக்கியர் இருந்தார். அவர் ஒரு அரசியல் மேதை.  ஒருநாள் அரசவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது அப்பொழுது சாணக்கியர் தம் மன்னரிடம் “குடிமக்கள் கடும் குளிரால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்” என்று கூறினார். “தலைமை அமைச்சர் அவர்களே தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.குளிரினால் வாடும் நம் குடிமக்களுக்கு அரசின் சார்பாக கம்பளிப் போர்வை வழங்கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கிறேன்”. என்றார் அரசர்.  அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். செய்தி அறிந்த கொள்ளையர்கள் கம்பளி போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்...